ads

5/01/2018

பயறு வகை தீவனப் பயிர்கள்


தட்டைப் பயறு / காரமணி
  • இந்த பயிர் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது.
  • தட்டைப்பயிரை பசுந்தீவனமாகவும், மேய்ச்சல் தரையாகவும்,  உலர் தீவனமாகவும் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பில் மக்காசோளம் மற்றும் சோளப்பயிருடன் கலந்து உபயோகிக்க வளர்த்தப்படுகிறது.
  • மூன்று பருவ காலங்களில் பயிரிடலாம்.
  • வருடந்திர பயிராக பயிரிடலாம்.
  • ரகங்கள் – CO5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC – 287 மற்றும் உள்ளுர் வகைகள்.
  • விதையளவு – 40 கிலோ / ஹெக்டர்.
  • அறுவடை விதைத்த 50 -55 நாட்களில் (50% பூக்கும் தருணத்தில்)
  • CO5 ரகமானது  பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.    (ஜூன் – ஜூலை மாதங்களில்)
CO5 ரகத்தின் குணங்கள
  • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் --18 to 20
  • உலர் பொருள் அளவு (%) – 14.64
  • கச்சாப் புரதம் (%) – 20.00
  • பயிரின் உயரம் ( செ.மீ.) – 93.00
  • கிளைகள் – 2-3
  • இலைகள் – 12
  • இலையின் நீளம் (செ.மீ.) – 12.1
  • இலையின் அகலம் (செ.மீ.) – 8.2
  • இலை தண்டு விகிதம் – 8.3
  • பயிரின் அமைப்பு – பாதி விரிந்த அமைப்பு.
  • பயிரின் வகை – நடுத்தர வகை

வேலிமசால
  • இப்பயிர் நீர்பாசன வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும், மானாவரியில் ஜீன் – அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்.
  • விதையின் அளவு 20 கிலோ / ஹெக்டர் .பார் அமைத்து கரையின் ஒரங்களில் உரங்கள் இட்டபிறகு, 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு மண்ணால் மூடிவிடவேண்டும்.
  • விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பிறகு 3 வது நாளும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • முதல் அறுவடை, விதைப்பு செய்த 90 நாட்கள் கழித்து அல்லது பயிர் 50 செ.மீ உயரம் வளர்ந்தவுடன் செய்யலாம். பிறகு 40 நாட்களில் இடைவேளியில் அதே உயரத்தில் அறுவடை செய்யலாம்.

குதிரை மசால்

  • குதிரை மசால் தீவனப்பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
  • இது நன்கு ஆழமாக வேரூன்றி வருடம் முழுவதும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய பயிராகும்.
  • நல்ல சுவையுள்ள பயிராகும். கச்சா புரதம் 15-20 சதவீதம் உள்ளது.
  • இப்பயிர்களின் வேர்முடிச்சுகளால் நுண்ணுயிரிகள் பெருகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை படுத்துவதால் மண் வளம் அதிகரிக்கிறது.
  • இதை பசுந்தீவனமாகவும்,உலர்தீவனமாகவும், ஊறுகாய் புல் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் மேய்ச்சல் தரையாக பயன்படுத்த இயலாது.
  • ரகங்கள் – ஆனந்த் 2, சிர்ஸா -9, IGFRI S – 244, and கோ -1.
  • கோ 1 ரகம் ஜூலை – டிசம்பர் காலத்திற்கு எற்றது.
  • குதிரை மசால் மிக வெப்பமான மற்றும் மிகவும் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது அல்ல.
  • விதை அளவு. – 20 கிலோ / ஹெக்டர்.
  • முதல் அறுவடை விதைப்பு செய்து 75-80 நாட்கள் கழித்தும், பிறகு 25 – 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.

கோ ரகத்தின் குணங்கள் (Characters of Variety Co 1)
  • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் / வருடம் – 70-80 ( 10 அறுவடையில் )
  • விதை உற்பத்தி கிலோ / ஹெக்டர் - 200- 250
  • புரதத்தின் அளவு (%) – 20-24
  • உலர் பொருள் அளவு (%) – 18-20
  • தாவரத்தின் உயரம் (செ.மீ) -60-80
  • ஒரு கதிரில் உள்ள கொத்துகளின் எண்ணிக்கை – 12-15
முயல் மசால் 
  • முயல் மசால் நேராக வளரக்கூடியது. இதன் தாயகம் பிரேசில் ஆகும்.
  • இது 0.6 முதல் 1.8 மீ வரை வளரக் கூடியது.
  • வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரும் தன்மை படைத்தது
  • வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய முயல் மசால், குறைந்த அளவு மழை பெறும் (450-840 மிமீ) பகுதிகளிலும் வளரும்
  • பல்வேறு விதமான மண் வகைகளிலும் முயல் மசால் வளரக்கூடியது
  • முயல் மசாலில் உள்ள புரதத்தின் அளவு 15-18 சதவிகிதமாகும்
  • முயல் மசால் நன்கு வளரக்கூடிய பருவம் – ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை
  • 30 x 15 செ.மீ வரிசையாக விதைப்பதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 6 கிலோ என்ற அளவிலும், தெளித்தல் முறையின் மூலம் விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவிலும் விதைகள் தேவைப்படும்
  • விதைப்பு செய்து 75 நாட்கள் கழித்து, முயல் மசால் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த அறுவடைகள் இத்தீவனப் பயிரின் வளர்ச்சியனைப் பொருத்தது
  • முதல் வருடத்தில், பயிரின் வளர்ச்சி குறைவாகவும், அதன் உற்பத்தியும் குறைவாகவும் இருக்கும்
  • முயல் மசால் விதைப்பு செய்து ஒரு வருடம் ஆன பின்பு அதன் விதைகளே கீழே விழுந்து முளைத்து விடுவதால், ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் 35 டன்கள் வரை முயல் மசால் அறுவடை செய்யலாம்

0 comments:

Post a Comment