மாடித்தோட்டம் என்றால் என்ன ?
நம் வீட்டின் மாடியில் செடி, கொடி, பூ,
காய்கனிகளை வளர்ப்பது. அது மாடியாகவோ,பால்கனியாகவோ இருக்கலாம். முன்பு வீட்டைச்சுற்றியிருந்த தோட்டத்திற்கு இடம்இல்லாமல் போனதால் அதை
மாடிக்குமாற்றம் செய்துவிட்டோம். நிலம் வாங்கிபயிர் செய்யும் பிரச்சனைகள்
இதில்இல்லாதது, இதை வரவேற்கத்தக்கதாகமாற்றியுள்ளது.
மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி
மாடிவீடுகள், அலுவலக வளாகங்கள்
ஆகியஇடங்களில் இடங்களில்
அமைக்கலாம்.மாடித்தோட்டம்
அமைப்பதற்கு முன் செய்யவேண்டியது என்ன? மொட்டைமாடியில்உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்துவிடாதபடி
வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசிதயார் செய்து கொள்ள வேண்டும்.
செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லதுகட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள்வரும்?
ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்)ஆபத்தானவை. இவ்வகை செடிகள்தரையை துளைத்து கட்டிடத்தைசேதமடையச் செய்துவிடும். ஜல்லிவேர்கள்கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில்
வளர்ப்பதற்கு சிறந்தவை. நாம்மாடித்தோட்டத்தில் பயிரிடும் பெரும்பாலனகாய்கறிகள், பழங்கள் ஆகியவை ஜல்லிவேர் கொண்டவைகளாகும்.
மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்குஎன்ன பயன்?
நாம் அனைவரும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உடலாலும்,
மனதாலும்மிகவும் சோர்வடைகின்றோம். முக்கியமாகமனச்சோர்வடையும் போது நமக்குமாடித்தோட்டம் அருமையான
நண்பனாகவும், நமக்கு பெரும்
மனஅமைதியையும் மற்றும்புத்துணர்ச்சியையும் தருகின்றது. நாம்பார்த்து,
பார்த்து வளர்க்கும் ஒவ்வொருசெடியும், அதன் வளர்ச்சியை காணும்போதுமனதுக்கு கிடைக்கும் தன்னிறைவும்,
சந்தோசமும் அளிக்கின்றது. மேலும்இதுவே நமக்கு வரும் பெரும்பாலான
நோய்களை விரட்டுகிறது.
நமது வீட்டை வெயிலின்
வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து
டிகிரிவரை குறைத்து இயற்கையான ஏசியாகசெயல்படுகிறதுஅதிக வெயில்,
குளிர்மற்றும் இரைச்சலிலிருந்து வீட்டைபாதுகாக்கிறது
நாமே வளர்த்த சத்தான காய்கறிகள்,
கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது.
நம்குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம்
ஏற்படுகிறது. அவர்களும் நம்மிடமிருந்துநல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது.