ads

4/25/2018

பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா?-(Panjakaaviya thayaripathu yeppadi)









இயற்கை விவசாய உத்தியான பஞ்சகவ்யா தயாரிப்பது மிக எளிது. 
அது தயாரித்திட தேவையான பொருட்கள்:

பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ, 
பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர், 
பசும்பால் 2 லிட்டர்,
 தயிர் 1 லிட்டர், 
நெய் – 1லிட்டர், 
நாட்டு சர்க்கரை 1 கிலோ, 
இளநீர் 3 லிட்டர், 
வாழைப்பழங்கள் 12 எண் தேவை. 

பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.

• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.

• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

வேளாண்மையில் பயன்பாடு:1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

பயன்படுத்தும் முறை:ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.


0 comments:

Post a Comment