ads

3/21/2018

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்பாடு -(Murungaiyai thaakum poochikal mattrum kattupaadu)

முருங்கையைத் தாக்கும் பூச்சிகளில் மிக முக்கியமானவை : இலை உண்பவை, பூ உண்பவை, சாறு உறிஞ்சும் பூச்சி, வேர் உண்பவை மற்றும் துளைப்பானிகள் ஆகும்.
பூக்களை உண்பவை
மொட்டு புழு
  • புழுக்கள் மொட்டுகளில் ஒற்றை அல்லது கூட்டாக முட்டைகளை இடுகின்றன.
  • பூ மொட்டுகளை புழுக்கள் துளையிட்டு இறுதியில் மொட்டுகள் உதிர்ந்துவிடும்.
  • மொட்டுப்புழு தாக்குதல் அதிகமாக தென் இந்தியாவில் காணப்படுகிறது. இவை 78 சதவீதம் தாக்குதலை ஏற்படுத்துவதாக கணிடறியப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
  • மரத்தினைச் சுற்றயுள்ள பகுதிகளை நன்கு உழுதல் வேண்டும்.
  • தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • விளக்கு பொறி ஒரு ஹெக்டேருக்கு ஒன்று அமைக்க வேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளான காப்பரில் 150 டபிள்யூ.பி 1 கிராம் / 1 லிட்டர் அல்லது மாலத்தியாண் 50 இ.சி 2 மிலி/லிட்டர்-ஐ தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைகளை உண்பவை
இலைப்புழு
புழுக்கள், இலைகளை சுரண்டி உண்பதால் இலைகள் சல்லடை போன்ற வலை அமைப்புடன் காணப்படும். வெண்மை நிற நீள் வட்ட வடிவ முட்டை குவியல்கள் இலைகள் மீது காணப்படும். கடுமையான தாக்குதலின் போது இலைகள் உதிர்ந்து விடும். ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் இளம் இலைகள் அதிகமான தாக்குலுக்கு உட்படும்.
கட்டுப்பாடு
  • மரத்தைச் சுற்றி உழவு செய்து, மண்ணில் புதைந்து காணப்படும் கூட்டுப்புழுக்களை வெளி கொணர்ந்து அழிக்க வேண்டும்.
  • புழு மற்றும் வலை போன்ற அமைப்பினை இளம்நிலையில் கண்டறிந்து அழித்தல் வேண்டும்.
  • விளக்கு பொறி ஒரு ஹெக்டருக்கு ஒன்று அமைக்க வேண்டும்.
  • காப்பரில் 50 டபிள்யூ.பி 1 கிராம் / லிட்டர் அல்லது மாலத்தியாண் 50 இ.சி 2 மி.லி / லிட்டர் பெண்தயாண் (0.05 சதவீதம்) என்ற அளவில் மருந்தினை தெளிக்க வேண்டும்.
கம்பளிப்புழு
  • மரத்தின் தண்டுப்பகுதியில் புழுக்கள் கூட்டமாகக் காணப்படும்.
  • புழுக்கள் இலைகள் மற்றும் தண்டுப்பகுதியைச் சுரண்டி உண்ணும்.
  • பகல் நேரத்தில் புழுக்கள் தண்டுப்பகுதியைச் சூழ்ந்து காணப்படும். கூட்டுப்புழுக்கள் மண்ணில் அதிகமாக காணப்படும்.
கட்டுப்பாடு
  • முட்டைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • மழை பெய்தவுடன் விளக்கு பொறி ஒரு ஹெக்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் பொருத்தி அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • தீ பந்தம் கொளுத்தி புழுக்களை அழிக்க வேண்டும்.
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கி / லி அல்லது எணர்டோசல்பானி 35 இ.சி 2 மி.லி/ லிட்டர் அல்லது கார்பரில் 50 டபிள்யூ.பி 2 கி/லிட்டர் தெளிக்க வேண்டும்.
சாம்பல் வண்டு
  • வண்டுகள் வேர் மற்றும் இலையினை உண்டு மரத்தினை வாடச் செய்கின்றன.
கட்டுப்பாடு
  • வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • கார்போபியூரான் 3 ஜி 15 கிலோ/ஹெக்டர் அளவினை நடவு செய்த 15-வது நாளில் இட வேண்டும்.
சாறு உறிஞ்சுபவை
காட்டன் அசுவினி
  • அசுவினிப்பூச்சி இளம் தண்டினைத் தாக்குகிறது.
  • முதல் நிலை புழுவான கிரைசோபெர்லா கார்னியாவை 1,00,000/ஹெக்டர் எண்ணிக்கையில் நிலத்தில் விட வேண்டும்.
  • மிதைல் டைமெடான் அல்லது டைமித்தியேட் 2 மி.லி/லிட்டர் தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பதற்கு முன் அனைத்து காய்களையும் நீக்க வேண்டும்.
துளைப்பான்கள்
காய் ஈ
  • காய் ஈ, காயின் உள் சென்று உட்பகுதியினை உண்ணும்.
  • காய்கள் மீது தேன் போன்ற திரவம் வடியும். இதனை தொடர்ந்து காயின் முனைப்பகுதி வறண்டு காணப்படும்.
கட்டுப்பாடு
  • தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • இப்பூச்சியினை ஈர்க்கும் பொருட்களான சிட்ரோனல்லா எண்ணெய், நீலகிரி மர எண்ணெய், வினிகர், டெக்ஸ்ட்ரோஸ் அல்லது லாக்டிக் அமிலம் வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • மரங்களைச் சுற்றியுள்ள நிலத்தை உழவேண்டும்.
  • கூட்டுப்புழுக்களைக் கொன்று தாய் ஈ உருவாவதைத் தடுக்க வேண்டும்.
  • எண்டோசல்பான் பொடி 25 கிலோ/ ஹெக்டர் வீதம் தெளித்து அழிக்க வேண்டும்.
  • நிம்பிசிட் 3 மி.லி/லிட்டர் கலந்து 50 சதவீதம் காய் உருவான பிறகு மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
மரப்பட்டை துளைப்பான்
மரச்சக்கைகளும், புழுவின் சிறு சிறு உருண்டையான கழிவுகளும் மரப்பட்டையின் மீது காணப்படும்.
தண்டு துளைப்பான்
மரப்பட்டையின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக துளைபோட்டு உண்ணும். தண்டு மற்றும் கிளைகளைத் தாக்கும்.
கட்டுப்பாடு
  • கழிவுகள் மற்றும் வளை போன்ற அமைப்புகளைத் தூய்மைபடுத்த வேண்டும்.
  • பஞ்சினை குளோரோபாம், பார்மலின் அல்லது பெட்ரோலில் நனைத்து துளை உள்ள இடத்தில் அடைத்து மண் கலவை கொண்டு பூச வேண்டும்.
வேர் உண்பவை
வெள்ளைப்புழு
இளம் பருவத்தில் வேர்களை உண்டு பிறகு முதிர்ந்த நிலையில் இலைகளை உண்ணுகின்றது. வண்டுகள் ஜூன்-ஜூலையில் வளர்ந்து செடியினைத் தாக்கும்.
கட்டுப்பாடு
  • மார்ச்-ஏப்ரல் மாதத்தில் உழுது மண்ணில் உள்ள முட்டைகளை வெளியே கொண்டு வருவதால் காகம் போன்ற பறவைகள் உணவாக உட்கொள்வதன் மூலம் அழிக்கலாம்.
  • நிலத்தில் நன்கு மக்கிய தொழு உரத்தினைப் பயன்படுத்த வேண்டும். மக்காத தொழு உரம், இளம் புழுக்கள் வளர்வதற்கு ஏற்ற ஊடகமாக அமையும்.
  • விளக்கு பொறிகளை ஒரு ஹெக்டருக்கு ஒன்று அமைக்க வேண்டும் (மழைக்காலத்தில்).

0 comments:

Post a Comment