ads

3/29/2018

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை-(Pasu maadugalukku theevana melanmai)


அடர் தீவனம் தயாரித்தல்:-

பல்வேறு முறைகள் 100 கிலோ(கிலோ) :-

1). கடலை புண்ணாக்கு ( 25),
      பருத்தி கொட்டை(24),
      பருப்பு நொய்(24),
      கோதுமை தவிடு(24),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

2). கடலை புண்ணாக்கு ( 30),
      பருத்தி கொட்டை(10),
      மக்காச்சோளம்(15),
      கேழ்வரகு(5),
      கொள்ளு(8), 
      கோதுமை தவிடு(14),
      நெல் தவிடு(15)
      தாதுஉப்பு கலவை(1), 
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

3). கடலை புண்ணாக்கு ( 35),
      பருத்தி கொட்டை(32), 
      கோதுமை தவிடு(30), 
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

4). கடலை புண்ணாக்கு ( 30),
      பருத்தி கொட்டை(15),
      மக்காச்சோளம்(18),
      கொள்ளு(5),
      கோதுமை தவிடு(29),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

5).  கடலை புண்ணாக்கு ( 25),
      பருத்தி கொட்டை(10),               
      மக்காச்சோளம்(10),
      மரவள்ளி மாவு (18),
      கோதுமை தவிடு(34),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

6). கடலை புண்ணாக்கு (30),
      பருப்பு நொய்(15),
      கோதுமை தவிடு(43),
      வெல்லப்பாகு(10),
      தாதுஉப்பு கலவை(1),
      உப்பு(1).

7). கடலை புண்ணாக்கு (15),
      கருக்காய் தவிடு(30),
      கோதுமை தவிடு(30),
      புளியங்கொட்டை நொய்(10),
      கேழவரகு/கம்பு/மக்காச்சோளம் (15),         
      வெல்லப்பாகு(8),
      தாதுஉப்பு கலவை(1), 
      உப்பு(1).

உலர் தீவனம்:-

உலர்ந்த நெல் தால், கோதுமை தால் , சோளத்தட்டு, கம்புத்தால், கேழ்வரகு தால், வேர்கடலை கொடி, உலுந்து செடி போன்றவைகள் உலர் தீவனம் என்று சொல்வோம்

அன்றாட தீவன அளவீடு( தேரயமாக)
பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்.

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.

எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம்.

கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

பால் வற்றிய மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 7 சதம்( 5.5% பசுந்தீவனம்,1%உலர் தீவனம், 0.5%அடர் தீவனம் தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்).

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.

எ.கா தோரயமாக 15 கிலோ பசுந்தீவனம், 2-4 கிலோ உலர் தீவனம், 1.5 கிலோ அடர் தீவனம்.

தீவன ஊறுகாய் புல் தயாரித்தல்(1000 கிலோ)
தேவைபடும் போருள் : 

தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், கோஎப்ஸ் 29-31,
வெலலப்பாகு அல்லது மேலாசஸ் 20 கிலோ, சாதரண உப்பு -8 கிலோ – பாலிதின பை அல்லது தொட்டி அல்லது டிரம்.

தயரிக்கும் முறை:-

பயிர்களை பால் பருவத்தில் அறுவடை செய்து 1-2 மணி நேரம் உளர விட வேண்டும்
பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும் (தீவனம் வெட்டும் இயந்திரம் இருந்தால் நன்று) நறுக்கியவற்றை குழிகளில் அல்லது டிரம்மில் அடுக்காக கொட்டவும். ஒவ்வொரு முறையும் நன்கு அழுத்தி விடவும் ( காற்று வெளியேற்றுவதர்காக)
ஒவ்வொறு அடுக்குக்கும் வெள்ளம் மற்றும் உப்பு தெளித்து நிரப்பவும்.

பிறகு காற்று மற்றும் நீர் புகாமல் பாலிதின் கொண்டு மூடவும் மூன்று மாதம் கழித்து இவற்றை 9-12 மாதம் வரை பயன்படுத்தலாம்.

பசுந்தீவனம் இல்லாத காலங்களில் இவற்றை பயன்படுத்தலாம். பசுமை மாறமல் இருப்பதால் கால்நடை விரும்பி உண்ணும்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.

0 comments:

Post a Comment