ads

3/23/2018

முருங்கையில் இலை தின்னும் புழுவின் தாக்குதலை -( Murungaiul illai thinnum puzhukkal)

முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செடியை வாட விட்டு தண்ணீர் பாய்ச்சவும் நன்றாக காய்ச்சல் இருந்தால்தான் செடி நன்கு காய்க்கும். தற்பொழுது அனேக இடங்களில் முருங்கை சாகுபடி செய்தள்ளனர். அவை நன்றாக பூ வந்துள்ளது அதில் கூட்டுபுழுவின் தாக்குதல் ஏற்பட்டு பூ, இலைகள் அனைத்து பாகத்தையும் தின்று ஒன்றாக சுருட்டி வைத்து விடுகின்றது.

வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மழைபெய்தாலும் செடியில் உள்ள பூக்கள் அனைத்தும் கொட்டிவிடும் மேலும் முருங்கை இலையில் இலை தின்னும் புழுக்கள் இலையின் அடிப்புறம் இருந்து மெல்லிய நூலாம் படை போன்ற அமைப்பு ஏற்ப்படுத்தி பச்சையத்தை உண்ணுவதால் இலைகள் காகிதம் போன்று காணப்படும்.
இலை தின்னும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த 3 சத வேப்ப எண்ணெயினை ஒரு வார இடைவெளியில் காலை வேளையில் இலைகள் நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணை கரைசல் தெளிக்கும் போது அதனுடன்
ஒட்டுபசை அல்லது காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும்

கூட்டுப்புழு தாக்குதல் அறிகுறி
முருங்கை செடியின் கொத்தில் உள்ள பூக்கள் இப்புழுக்களால் பாதிக்கப்பட்டு பூக்கள் அனைத்தும் ஒன்றாக சுருண்டு காணப்படும்.  பார்ப்பதற்கு நூலாம் படையில் பூக்கள் ஒன்றாக பிண்ணியது போல் காணப்படும்.

கட்டுப்படுத்தும்முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு மோனோகுரோட்டோபாஸ்; 2 மில்லி  என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குறிப்புகள்

முருங்கை நடவு செய்து செடி 2 ½ அடி வளர்ந்த பின்பு செடியின் நுனியை கிள்ள வேண்டும். 20 வது கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும்.
வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல்மகரந்தசேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு.

3 நாள் புளித்த தயிரை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்தால் 20 சதம் வரை மகசூலை அதிகப்படுத்தலாம்.

0 comments:

Post a Comment